பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-09-03 11:30 GMT

நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் 3 பூங்காக்கள் செயல்பட்டு வந்தது. இதில் 2 பூங்காக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. மீதமுள்ள ஒரு பூங்காவும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மூடப்பட்டது. இதனால் சிறுவர்கள் பூங்காக்களில் விளையாட முடியாமலும், பெரியவர்கள் நடைபயிற்சிக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த 3 பூங்காக்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்