இடித்த பள்ளிக்கட்டிடத்தை அகற்றுவார்களா?

Update: 2022-08-11 12:17 GMT

பாணாவரம் அருகில் உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்குள்ள பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு, அதை அகற்ற காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் தனி நபருக்கு பணி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு இதுவரை அகற்றவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தமிழ்வாணன், காவேரிப்பாக்கம் 

மேலும் செய்திகள்