திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சியில் பெரிய ஏரி, சித்தேரி என 2 ஏரிகள் உள்ளன. அதில் சித்தேரியின் ஏரிக்கரையில் தார் சாலை உள்ளது. அதில் பஸ்கள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் உள்ளது. தண்ணீர் வரும் கால்வாயை ஒருவர் ஆக்கிரமித்து, கடை கட்டுவதற்காக தார் சாலை மட்டத்துக்கு 20 அடி உயரத்தில் மண்ணை கொட்டி சமன்படுத்தி உள்ளார். இதனால், மழைக் காலங்களில் ஏரிக்கு கால்வாயில் தண்ணீர் வராது. ஆக்கிரமிப்பால் நீர் வரத்து தடை படும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
-மணியன், தேசூர்.