திமிரி அருகே தாமரைப்பாக்கம் கிராமம் உள்ளது. சென்னையில் இருந்து ஆரணி செல்லும் பஸ்கள் அனைத்தும் ஆற்காடு, திமிரி, தாமரைப்பாக்கம் வழியாக செல்கின்றன. அந்த வழியாக வெளியூர் அரசு, தனியார் பஸ்களும், உள்ளூர் அரசு, தனியார் டவுன் பஸ்களும் சென்று வருகின்றன. மேலும் திருவண்ணாமலை, போளூர், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த வழியாக தான் மக்கள் சென்று வருகின்றனர். தாமரைப்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. ஆரணி மார்க்கமாகவும், ஆற்காடு மார்க்கமாகவும் இரு பக்கமும் பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-பொன்னுசாமி, திமிரி.