செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா?

Update: 2022-12-28 11:47 GMT

திருவண்ணாமலை ஒன்றியம் பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆத்திப்பாடி கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள தெற்கு வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சத்துணவு சாப்பிட வருகிறார்கள். அங்கன்வாடி மையம் இருக்கும் இடம் அதிகளவில் புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும். பாைதயை சரி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவா, ஆத்திபாடி. 

மேலும் செய்திகள்