பொதுக்கூட்டம் நடத்த வேறு இடத்தில் அனுமதி வழங்குவார்களா?

Update: 2022-08-06 13:06 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே வேம்புலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பக்கம் உள்ள சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் மேடை போட்டு, மைக் வைத்து பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இவ்வாறு பொதுக்கூட்டங்கள் மாலை நேரத்தில் நடத்தப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி கும்பிட முடிவதில்லை. மேலும் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாலும் அமைதியாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. கூட்டத்துக்கு வருவோர் வாகனங்களை கோவில் முன்பு நிறுத்துவதால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. முத்துக்கடை பஸ் நிலையம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், முத்துக்கடை பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து வேறு இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்குவார்களா?

கே.கதிரவன், ராணிப்பேட்டை

மேலும் செய்திகள்