தகவல் பலகையில் மாவட்டத்தின் பெயரை மாற்றுவார்களா?

Update: 2022-09-03 12:04 GMT

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில். மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதியில் பெரும்பாலான அரசு அறிவிப்பு, விளம்பர பலகைகளில் இன்னும் வேலூர் மாவட்டம் என்றே உள்ளது. இதனால் புதிதாக ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பரதேசிப்பட்டி ஊராட்சியில் அரசு தகவல் பலகையில் இன்னும் வேலூர் மாவட்டம் என்றே உள்ளது. இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மாவட்டத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரணவ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்