புதிய கட்டிடம் கட்டுவார்களா?

Update: 2023-09-13 17:53 GMT

ஆற்காடு ஒன்றியம் புதுப்பாடி ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான கட்டிடம் புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ளது. இது, பழமையான கட்டிடமாகும். தற்போது வரை இந்தப் பாழடைந்த கட்டிடத்தில் தான் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்து வந்தது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வம், புதுப்பாடி.

மேலும் செய்திகள்