பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-06-16 20:33 GMT

நெமிலியை அடுத்த பள்ளூர் ஊராட்சியில் இருந்து தினமும் பலர் காஞ்சீபுரம், அரக்கோணம் பகுதிகளுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். அங்குள்ள கணபதிபுரம் செல்லும் சாலையில் புதிய காலனியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

அதேபோல் காஞ்சீபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள பருவமேடு பகுதியிலும், நெமிலி செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியிலும் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்மோகன், நெமிலி.

மேலும் செய்திகள்