தாலுகா அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்குமா?

Update: 2023-06-11 16:45 GMT

கலசபாக்கம் தாலுகா அளவில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அதன்பிறகு தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் புதிதாக வேளாண்மைத்துறை அலுவலகம் கட்டப்பட்டதால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அந்த அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் அமர போதிய இடவசதி இல்லை. எனவே ஏற்கனவே தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரா.ஜெகன்நாதன், கடலாடி. 

மேலும் செய்திகள்