அணைக்கட்டு வழியாக அப்புக்கல், வரதலம்பட்டு, கீழ்கொத்தூர் செல்லும் சாலையோரம் சிறிய கிணறு உள்ளது. அந்தச் சாலையில் தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். ஏராளமான வாகனங்களும் செல்கின்றன. அந்தக் கிணறு திறந்த வெளியாக உள்ளது. கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் தவறி சாலையோர கிணறுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர கிணறுக்கு தடுப்பு அமைப்பார்களா?
-என்.வரதராஜ், கீழ்கொத்தூர்.