கருவூல நுழைவு வாயில் திறக்கப்படுமா?

Update: 2023-03-05 11:14 GMT

வாலாஜா பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை பக்கத்தில் சார் நிலை கருவூலம் உள்ளது. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே தனியாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நுழைவு வாயில் பொதுமக்கள், பயனாளிகள் வரவிடாமல் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த அலுவலகத்துக்கு வரும் மக்கள் பஸ் நிலையம் எதிரில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் வழியாக வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்க வேண்டிய நிலை உள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த அலுவலகத்துக்கு வருபவர்கள் பயன்படுத்த எதிரில் உள்ள கழிவறைகள் யாரும் பயன்படுத்த முடியாத படி பூட்டப்பட்டுள்ளது. உடனடியாக கழிவறைகளும் பிரதான நுழைவு வாயில் கேட்டும் திறக்கப்பட வேண்டும்.

-மார்கபந்து, வாலாஜா.

மேலும் செய்திகள்