சுகாதார வளாகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-06-30 20:05 GMT

வாலாஜா பூங்கா எதிரில் 15-வது வார்டில் காந்திநகர் உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தது. அந்தக் கட்டிட வளாகத்தில் கழிப்பறைகளும், குளியல் அறைகளும் நன்றாக இருந்தன. கடந்தசில ஆண்டுகளாக சுகாதார வளாகத்தை மக்கள் பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டுள்ளன. அங்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வரதராஜன், வாலாஜா. 

மேலும் செய்திகள்