திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கிளைச்சிறை உள்பட பல அலுவலகங்கள் உள்ளன. இங்கு அலுவலக வேலை நாட்களில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட சுகாதார வளாகம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பொதுச் சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா?
-சிவா, திருவண்ணாமலை.