சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-03-03 17:48 GMT

சோளிங்கர் தாலுகா பரவத்தூரில் அரசு கிளை சுகாதார நிலையம் உள்ளது. அங்குள்ளவர்களுக்கு இரவில் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள பாராஞ்சி அல்லது வெங்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆகையால் பரவத்தூர் கிளை சுகாதார நிலையத்தில் இரவில் டாக்டர், மருந்தாளுனர், நர்சு ஆகியோரை நியமித்து மக்களுக்கு சிகிச்சை அளித்தால் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட மருத்துவ சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பெ.சு.மணி, சமூக ஆர்வலர், பரவத்தூர்.

மேலும் செய்திகள்