வழிகாட்டி போர்டு பெரிய அளவில் வைக்கப்படுமா?

Update: 2025-06-29 19:04 GMT

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் படவேடு, அமிர்தி செல்லும் சாலை பிரிகிறது. அப்பகுதியில் நெடுஞ்சாலை சார்பில் பெரிய அளவில் வழிகாட்டி பலகை வைக்கவில்லை. ஆகையால், அந்த வழியாக படவேடு செல்லும் வாகனங்கள், அமிர்தி செல்லும் வாகன டிரைவர்கள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கண்ணமங்கலம், புதுப்பேட்டை பகுதியில் விரைவில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வழிகாட்டி பலகை பெரிய அளவில் வைக்க வேண்டும்.

-நாராயணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்