ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-01-29 15:25 GMT

வாலாஜாபேட்டையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வெற்றிலை காரத் தெரு, கச்சாலன் தெரு உள்ளன. 2 தெருக்கள் நடுவே நார்வா சந்து தெரு உள்ளது. அந்த சந்து தெரு வழியாக பல ஆண்டுகளாக மக்கள் நடமாட்டம் இருந்தது. காலப்போக்கில் நார்வா சந்து தெரு ஆக்கிரமிப்பில் சிக்கியது. அங்கு கழிவுப்பொருட்களை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கால்வாய் தூர்வாரப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் நார்வா சந்து தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

-அகத்தீஸ்வரன், வாலாஜா.

மேலும் செய்திகள்