அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-01-29 16:22 GMT

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அதன் பின்பகுதி வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் பாதை உள்ளது. அதையொட்டிய பகுதியில் பலர் கழிப்பிடம் செல்கிறார்கள். துர்நாற்றம் வீசுவதால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமர முடியாத நிலை உள்ளது. அந்தச் சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பு பகுதிகளில் தகாத சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்வோர் பாதிப்படைகின்றனர். ரெயில்வே நிர்வாகமும், டவுன் போலீசாரும் இணைந்து அந்தப் பகுதியில் தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் அசுத்தம் செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.

-தங்கமணி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்