வேளாண் அலுவலகம் திறக்கப்படுமா?

Update: 2023-05-07 12:57 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு செங்கம்-போளூர் செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் வேளாண் துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. விவசாயிகள் நலன் கருதி அந்த அலுவலகத்தை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ஆர்.ஜெகன்நாதன், கடலாடி. 

மேலும் செய்திகள்