திமிரி பேரூராட்சியில் வாராந்தோறும் வியாழக்கிழமை காய்கறி சந்தை நடந்து வருகிறது. இந்தச் சந்தை ஊரின் நடுவே குளக்கரையில் நடக்கிறது. குளக்கரையைச் சுற்றி உள்ள வீடுகளில் வசித்து வருபவர்கள் சென்றுவர மிகச் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் குளத்தையொட்டி உள்ள தெருக்களிலும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து, யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சந்தையை நடத்துமா?
-மோகநாதன், திமிரி.