அணைக்கட்டு தாலுகா அகரம் பிர்கா உட்கோட்ட வருவாய் ஆய்வாளருக்கான இருப்பிடம், அலுவலக கட்டிடம் பாழடைந்துள்ளது. அந்தக் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்துள்ளது. வருவாய் ஆய்வாளர் பணி செய்ய இடம் இல்லாமல் உள்ளார். அதேபோல் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகமும் பாழடைந்துள்ளது. அகரம் கிராமத்தில் அரசு ஒருங்கிணைந்த அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. அது, பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேயே உள்ளது. எனவே அரசு அகரம் வருவாய் ஆய்வாளர் இருப்பிடம், அகரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடங்களை புதிதாக கட்டித்தர வேண்டும். அந்தக் கட்டிடங்களை மராட்டிபாளையம்-அணைக்கட்டு நெடுஞ்சாலையில் கட்டினால் மக்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இனியாவது, அரசு நடவடிக்கை எடுக்குமா?
-எஸ்.கே.லட்சுமணன், அகரம்.