ஆற்காடு பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதை மற்றும் அமர்வதற்காக இருக்கைகள் உள்ளன. அங்கு நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகள் கடைக்கு முன்பாக இருந்த இருக்கைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மேல் வாடகைக்கு கடைகளை விட்டு அதற்குண்டான வாடகை பணத்தை தாங்களே வசூல் செய்து கொள்கின்றனர்.
இதனால் நகராட்சிக்கு இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமலும் நடந்து செல்வதற்கு பாதை இல்லாமலும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முகம்மதுசலீம், ஆற்காடு.