புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா?

Update: 2023-06-07 13:36 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகக் கருதி, அதை இடித்து விட்டு முக்கியமான கட்டிடங்களை கட்ட வேண்டும் என ஏற்கனவே நகராட்சி மூலம் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த வியாபாரிகளை காலி செய்தனர். கடைகளை காலி செய்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்தக் கடைகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜன், ஆற்காடு.

மேலும் செய்திகள்