வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே கிருபானந்தவாரியார் வீதி, மண்டி தெரு சந்திப்பில் குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க காவல் சேவை மையம் உள்ளது. இங்கு காவலர்கள் பகுதி நேரமாக மட்டுமே வந்த செல்கின்றனர். மற்ற நேரங்களில் அருகே உள்ள கடைக்காரர்கள் அமர்ந்துள்ளனர். அங்கு முழுநேரமும் காவலர்களை பணி அமர்த்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராம்ராஜ், வேலூர்