கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் எதிரே காமராசர் தெரு வழியாக செல்ல சிரமமாக உள்ளது. அந்தத் தெரு தொடக்கத்திலேயே பூக்கடை, பழக்கடை ஆக்கிரமிப்புகள், கட்டிட கழிவுகள், குப்பைகள் கிடக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குப்பைகள், கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்தப் பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தால் பொதுமக்கள் சென்று வர பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.பூங்குழலி, கீழ்பென்னாத்தூர்.