பத்திரப்பதிவு முறைப்படுத்தப்படுமா?

Update: 2023-01-29 14:30 GMT

செங்கம்-போளூர் ரோடு ராஜவீதி தெரு சந்திப்பில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளர் கடந்த சில வருடங்களாக பணியமர்த்தப்படாமல் உள்ளதாக தெரிகிறது. அங்கு பொறுப்பு சார்பதிவாளர் பணியில் உள்ள நிலையில் காலை 11 மணிக்கு மேல் பத்திரப்பதிவு தொடங்கி இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை நடக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் டோக்கன் முறையை மீறி சிலருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. பத்திரப்பதிவை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?

-சுபாஷ், செங்கம்.

மேலும் செய்திகள்