கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் சாலைகளில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவர் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்வோரையும் விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக காணப்படுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கலட்சுமி, வடக்கு கன்னக்குறிச்சி