நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.