அடிப்படை வசதிகள் கோரிக்கை

Update: 2026-08-09 13:07 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பழங்கனாங்குடி பூலாங்குடி காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான குடிநீர் வசதியும், சாக்கடை வசதியும் இல்லாததால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பஸ் வசதியும் இல்லாததால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்