பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் இருந்து வதிஷ்டபுரம் செல்லும் பாதையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மதுப்பிரியர்கள் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கேயே மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முகம் சுளிக்கும் வகையிலான சூழல் நிலவுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.