நிரந்தர சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

Update: 2022-12-25 10:15 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும் கிரிவலம் செல்வதற்கும் பவுர்ணமி நாள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் ஈசானிய லிங்கம் அருகே வரும்போது அங்கே பொதுச் சுகாதார வளாகம் இல்லாமல் இயற்கை உபாதைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஈசானிய லிங்கம் அருகில் அவலூர்பேட்டை சாலை இணைப்பில் நிரந்தர புதிய சுகாதார வளாகத்தை நகராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

-தேவேந்திரன், ஐயப்பநகர், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்