பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தரப்படுமா?

Update: 2025-03-23 19:05 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளன. எங்கள் கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணதாசன், அக்ராபாளையம். 

மேலும் செய்திகள்