பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 19:25 GMT

வேலூரில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர் -காட்பாடி சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை அருகிலும், நேஷனல் சர்க்கிள் பஸ் நிறுத்தத்திலும் தினமும் ஏராளமான முதியோர், பெண்கள், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. அனைவரும் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது. சி.எம்.சி. பஸ் நிறுத்தம், நேஷனல் பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அல்லது பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஓ.ஜெ.கதிர்வேல், வேலூர். 

மேலும் செய்திகள்