சந்தைக்கு வெளியே வியாபாரம் செய்யும் வியாபாரிகள்

Update: 2026-05-24 18:55 GMT

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செயயாமல், கடைக்கு வெளியே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் சந்தையில் பொருள்களை வாங்கும்போது ஒருவர் மீது ஒருவர் இடித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இது சம்பந்தமாக ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கடையில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

-நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்