கோவில் புனரமைப்பு பணி தொடங்குவது எப்போது?

Update: 2023-02-15 13:35 GMT

போளூர் தாலுகா வடமாதிமங்கலம் கிராமத்தில் மகாதேவீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழக அரசு 7 மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. கோவிலில் பாலாலயம் நடந்து 7 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் புனரமைப்பு பணிகளை தொடங்கவில்லை. தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில் புனரமைப்பு பணியை தொடங்க வேண்டும்.

-பக்தர்கள், வடமாதிமங்கலம். 

மேலும் செய்திகள்