போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-02-01 16:42 GMT

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது. பழைய திருமண மண்டபத்தை சீரமைத்து வங்கிக்கு ஏற்ற வகையில் அமைத்து தந்துள்ளனர். குறுகலான இத்தெருவில் செயல்படும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களை தெருவிலேயே நிறுத்தி விடுவதால் அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் இடையூறாக உள்ளது. எனவே குறுகலான தெருவில் செயல்படும் வங்கிக்கிளை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு தனி வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தர வேண்டும்.

-குப்புசாமி, கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்