சுத்தமில்லாத நிழற்குடைகள்

Update: 2024-01-28 17:18 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் 2 இடங்களில் பயணிகள் ஓய்வெடுக்க நிழற்குடைகள் உள்ளன. அங்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. முதியவர்கள், பெண்கள் தரையில் அமருகிறார்கள். பஸ் நிலையத்தில் உள்ள 2 நிழற்குடைகளும் அசுத்தமாக உள்ளன. அங்கு சில சமயங்களில் நிற்கவும், அமரவும் முடியாமல் பொதுமக்கள், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்