பயணிகள் நிழற்கூடம் இட்லி கடையானது

Update: 2024-06-02 20:30 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தமும், பயணிகள் நிழற்கூடமும் உள்ளது. பயணிகள் நிழற்கூடத்தில் இருந்த இருக்கைகளை உடைத்து பெயர்த்து விட்டனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார முடியாத நிலை உள்ளது. இருக்கைகள் இல்லாத பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டியை நிறுத்தி இட்லி சுட்டு விற்கிறார்கள். திடீரென மழைப் பெய்தால் பயணிகள் எங்கே ஒதுங்குவது? இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமுருகன், அப்துல்லாபுரம். 

மேலும் செய்திகள்