ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்

Update: 2022-11-23 16:27 GMT

தண்டராம்பட்டு அருகில் உள்ள அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையையொட்டி பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஏரியில் அதிகமாக தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. கோர்ட்டு உத்தரவுபடி மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். அதேபோல் அகரம்பள்ளிப்பட்டு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பிரிட்டோ, அகரம்பள்ளிப்பட்டு. 

மேலும் செய்திகள்