மருத்துவக் கழிவுகளை கொட்டும் அவலம்

Update: 2023-02-22 16:17 GMT

காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் பஞ்சலிங்க ஈஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள் ஆகியவற்றை ெகாண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதைத் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, கொண்டாபுரம்.   

மேலும் செய்திகள்