தபால் பெட்டியை வேறு இடத்தில் மாற்ற வேண்டும்

Update: 2023-03-05 11:46 GMT

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே காந்தி ரோடு பெரியார் மாளிகை பகுதியில் உள்ள மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் எப்போது தபால் எடுக்கப்படுகிறது என்ற நேர தகவல் குறிப்பிடப்படவில்லை. தபால் துறையினர் உடனடியாக நேரம் குறிப்பிட வேண்டும். பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொது இடத்தில் தபால் பெட்டியை வைக்க வேண்டும். மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ளதைப் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்