குட்டையை முறையாக தூர்வார வேண்டும்

Update: 2026-05-03 18:43 GMT

அணைக்கட்டு தாலுகா மராட்டிப்பாளையம் கிராமத்தில் 60 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 3 ஏக்கர் நீர்நிலை நாரப்பகுட்டை, மக்கள் போராட்டத்துக்கு பின் சென்ற நிதியாண்டில் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு, தூர்வாரப்பட்டது. ஆனால் குட்டையை சீராக, சமமாக தூர்வாராமல், திட்டு திட்டாக தூர்வாரி உள்ளனர். அந்தக் குட்டைக்கு 4 பக்கமும் கரை போட்டு விட்டார்கள். கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் இருந்து தான் மழைநீர் குட்டைக்கு வரும். ஆனால், தற்போது கரைகள் அமைத்ததால் மழைநீர் வராத படி செய்து விட்டார்கள். குட்டையின் வடகிழக்கு மூலையில் வடிகால்வாய் உள்ளது. அது, தெற்கு நோக்கி போகிறது. அந்த வடிகால்வாயை சீரமைக்க வேண்டும். குட்டையை முறையாக தூர்வாரி, நீரை தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், மராட்டிப்பாளையம். 

மேலும் செய்திகள்