ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-03-12 13:00 GMT


அரக்கோணம் தாலுகா செம்பேடு ஊராட்சி, பாரதி நகரில் குளம் உள்ளது. பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த குளத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். இதனால் குளம் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. வருவாய்த்துறையில் புகார்தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. உடனடியாக குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்