சுடுகாட்டுக்கு பாதை வசதி தேவை

Update: 2022-10-09 10:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்த மக்களில் யாரேனும் இறந்து விட்டால் பிணத்தை எடுத்துச் செல்ல 60 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த தருவார்களா?

ம.அரிக்குமார், ஆவணியாபுரம். 

மேலும் செய்திகள்