சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்

Update: 2022-12-11 13:30 GMT

திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதிகளாக போளூர் சாலை, மத்திய பஸ் நிலையம், சின்ன கடை வீதி, மாடவீதி, தண்டராம்பட்டு சாலை, செங்கம் சாலை உள்ளிட்டவை உள்ளன. இந்த பகுதிகளில் பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வபோது சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் இவற்றினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

- ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்