பஸ் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-03 18:02 GMT

ஆரணி தாலுகா சேவூர் பைபாஸ் சாலையில் 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடையே ஒரு பயணியர் நிழற்கூடம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பட்டு வந்த நிலையில், கடந்த 4, 5 ஆண்டுகளாக அந்த பயணியர் நிழற்கூடம் முற்றிலும் சேதமாகி வருகிறது. இரு பக்கமும் இருந்த ஜன்னல்கள் பெயர்க்கப்பட்டுள்ளது. அங்கு குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். மதுபானம் குடிக்கும் இடமாக மாறி வருகிறது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பஸ் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கவோ அல்லது இடித்து விட்டு புதிதாக கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும் செய்திகள்