சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கட்டிடம்

Update: 2023-08-13 17:46 GMT

ஆலங்காயம்-காவலூர் சாலையில் கல்லரப்பட்டி அருகே வனத்துறை சோதனைச் சாவடி இருந்தது. அதை, திடீரென அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றி விட்டனர். அந்தக் கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மது, மாது பிரியர்கள் அங்குத் தங்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் அந்தக் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-எல்.கார்த்திகேயன், ஆலங்காயம்.

மேலும் செய்திகள்