உடைக்கப்பட்ட ஏரிக்கோடியை சரி செய்ய வேண்டும்

Update: 2022-11-16 11:41 GMT

போளூர் ஒன்றியம் சந்தவாசலை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தில் ஏரி உள்ளது. ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏரியில் நீர் அதிகமாக தேங்கும்போது, ஆக்கிரமிப்பு செய்து சாகுபடி செய்யும் பகுதியை நீர் மூழ்கடிப்பதால், ஏரியின் கோடியை உடைத்து விட்டுள்ளார்கள். ஆனால் இதுநாள் வரை உடைத்த கோடியை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. உடைக்கப்பட்ட பகுதியில் நீர் வழிந்தோடுகிறது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்ட பகுதியை சரி செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், நாராயணமங்கலம்.

மேலும் செய்திகள்