தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-08-11 12:36 GMT

அரக்கோணம் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் மரம் வளர்ந்தும், தளத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாதது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால், அந்தப் பள்ளிக்கு சென்ற நகராட்சி ஆணையர் லதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும், எனத் தெரிவித்தனர். இதே போல் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பியில் மரக்கிளைகள் உரசின. இதுகுறித்தும் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் மரக் கிளைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். மேற்கண்ட இரு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

பொதுமக்கள், அரக்கோணம்.

மேலும் செய்திகள்