தினத்தந்திக்கு நன்றி

Update: 2024-03-24 11:46 GMT

வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி பகுதியில் கோவில்களுக்கு அருகில் மதுபானக் கடை இருந்தது. அந்த மதுபானக் கடையால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வந்தது. மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால், மதுபானக் கடை தற்போது மூடப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

-லோகேஸ்வரன்மோகன், வேலூர்.

மேலும் செய்திகள்